திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள், DSP அலுவலகங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களிடம் 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பொதுமக்கள் தங்களின் குறைகள் குறித்த புகார்களை சிறப்பு முகாமில் தெரிவிக்க அறிவுறுத்தியதின் பேரில் மாவட்டம் முழுவதும் இடப்பிரச்சினை சம்பந்தமாக 71 மனுக்களும், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக 34 மனுக்களும், குடும்ப பிரச்சினை சம்பந்தமாக 26 மனுக்களும் மற்றும் இதர வகையில் 84 மனுக்களும் மொத்தம் 215 மனுக்கள் பெறப்பட்டு, பெறப்பட்ட மனுக்களுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திண்டுக்கல் S.P.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.