திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழனி, ராமநாதன் நகரை சேர்ந்த ராமராஜ் (59) என்பவரை போக்சோ வழக்கில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி.கற்பகவள்ளி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (06.04.2023) ம்தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ராமராஜ் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.