திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுபிகரன்(50). நாகர்கோவிலில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த இவர், தினமும் மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து ஊருக்கு திரும்பிய அவர், மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்து மனைவி லதாவுடன் (48). தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த அவர்களது மகன் சுமன் (20). லதாவின் தங்கை சுதா (40).ஆகியோர் அவரை கண்டித்துள்ளனர்.
அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், 3 பேரும் சேர்ந்து கம்பு மற்றும் மண்வெட்டியால் சுபிகரனை தாக்கியுள்ளனர். இதில் சுபிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த ஏர்வாடி காவல் ஆய்வாளர், செல்வி மற்றும் காவலர்கள், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து மனைவி உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்