கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை வேல்முருகன் ஓட்டல் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் இருந்தது, விற்பனைக்காக வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.