சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் இ.கா.ப* உத்தரவின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மேற்பார்வையில், குன்றக்குடி காவல் ஆய்வாளர் சுந்தரி, சார்பு ஆய்வாளர் பழனி குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் சரவணன், காவலர்கள் இளையராஜா, பார்த்திபன், முருகன், கோபாலகிருஷ்ணன்,கார்த்திக், மற்றும் முருகானந்தம், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் தெரிந்த விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியைச் சேர்ந்த என்பவரை கைது செய்து விசாரித்ததில், வீடு புகுந்து கொள்ளையடித்தது உறுதியானது. 45 சவரன் தங்க நகை 14 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், சுமார் 25 லட்சம் மதிப்பிலான மூன்று நவீன கார்கள் பறிமுதல். சாமர்த்தியமான முறையில் சிசிடிவி கேமரா பதிவில் சிக்காமல், கார் புரோக்கர் வேடத்தில் நடமாடியது விசாரணையில் அம்பலமானது . அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுநீதிமன்ற காவலுக்கு *அனுப்பப்பட்டார். குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் இ.கா.ப பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி