திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசன்ன குமார், இ.கா.ப., வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்: வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீட்டை வாடகை அல்லது குத்தகை என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து பெற்றுக் கொள்ளும் நபர்கள், பின்னர் உரிமையாளருக்குத் தெரியாமல் வேறு நபர்களிடம் பெரும் தொகைக்கு அதை உள்வாடகைக்கு விட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே, வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் ஒப்பந்தம் பெற்ற நபர்கள்தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபா், உரிமையாளர் அனுமதியின்றி அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
















