கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அங்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள தீர்த்தமலை அடிவாரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை செய்தபோது குற்றவாளி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார், கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 650 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.