மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில்,
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக சட்டம் விழிப்புணர்வு முகாம் விராலிப்பட்டி வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தில் நடந்தது. இந்த முகாமில், சட்டப்பணி குழு வழக்கறிஞர்கள் முத்துமணி, விஜயகுமார், வெள் ளைச்சாமி, சீனிவாசன், தயாநிதி, மூர்த்தி, சுனிதா ஆகியோ ர் சட்டப் பணி ஆணை குழுவின் செயல் பாடுகள் பற்றியும் பொது மக்கள் தங்கள் பிரச்சனை களை அணுக வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கி பேசினர். இதில், சட்டப் பணிகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை, சட்ட தன்னார் வலர்கள் செய்திருந்தனர். முடிவில்,
கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக் காளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி