திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த மணலிவிளை சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (21). இவர், திசையன்விளை பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தில் வாளுடன் சுற்றித் திரிவதாக, காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள், ஆன்றோ பிரதீப், சதீஷ் ஆகியோர் சென்று, வாளுடன் சுற்றித் திரிந்த மணிகண்டனைப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி வழக்குப் பதிந்து, மணிகண்டனைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
