அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, (21.05.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதன்கிழமையான அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 19 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த, காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்கள் (தலைமையிடம்), மற்றும் மாவட்ட குற்ற ஆவண பதிவேடு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோர்கள் உடனடியாக பொது மக்களின் மனுக்களின் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.