தென்காசி: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும்,வாக்கு எண்ணிக்கை 22.02.2022 ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.. மேலும் இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. சியாம் சுந்தர் அவர்கள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்..