கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை TO தருமபுரி தேசிய நெடுஞ்சாலை காடுசெட்டிபட்டி அருகிலுள்ள கிரிஜா பால் கம்பெனி முன்பு மற்றும் ராயக்கோட்டை TO பஞ்சபள்ளி ரோடு உடையண்டஹள்ளி ரயில்வே கேட் அருகே ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த இரண்டு வாகனங்களைநிறுத்திய போது வாகனத்தின் இரண்டு ஓட்டுநர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இரண்டு வாகனங்களிலும் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 7,87,600/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள், 12,480/- ரூபாய் மதிப்பிலான மதுபானம் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை, மதுபானம் கடத்தி வந்த இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்