திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பலர் மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2) படி தங்களது நான்கு சக்கர வாகனங்களிலும், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும், ஆம்னி பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைந்த அளவு ஒளி உட்புகும் அளவிற்கு கருப்பு நிற ஸ்டிக்கர் (Sun control film) ஒட்டி பயன்படுத்தி வருவதாக தெரிய வந்ததால் வருகிற (23.01.2025)-ஆம் தேதி முதல் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து துறையினரும், நான்கு சக்கர வாகனங்கள், சுற்றுலா வேன், மற்றும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ஆய்வின்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவு ஒளி உட்புகும் அளவிற்கு கருப்பு நிற ஸ்டிக்கர் (Sun control film) ஒட்டி இயக்கப்படும் வாகனங்களுக்கு, மத்திய மோட்டார் வாகன விதி எண் 100-ன் படி அபராதம் விதிக்கப்படுவதோடு, மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 53(1)-ன் எவ்வித பாரபட்சமின்றி வாகனத்தின் உரிமமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்