திண்டுக்கல்: கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38). என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37). தவமணி(27). சத்யராஜ்(27). புதுக்கோட்டையை சேர்ந்த தணிகாசலம்(26). சிவகங்கை சேர்ந்த ராஜேஷ்(28). மற்றும் (17). வயது சிறுவன் ஆகிய 6 பேரும் 2 காரில் வந்து கோவர்த்தனன் வந்த காரை மறித்து கழுத்தில் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து வடமதுரை காவல் ஆய்வாளர் நிதிக்குமார், சார்பு வேலுமணி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு கார், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா