திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அன்றாடம் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும். சரவணன் என்பவர் ரூ.2 லட்சம் வரிப்பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ.2 லட்சத்தை திரும்ப பெற்றுகொண்டு ஜூலை 4ல் அவரை மாநகராட்சி சஸ்பெண்ட் செய்தது. சரவணன் பணிக்கு சேர்ந்ததில் இருந்து தற்போது வரை உள்ள கணக்குகளை சரிபார்க்குமாறு கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
2023 ஜூனிலிருந்து தற்போது வரை ரூ.4.66 கோடி வரிப்பணத்தை சரவணன் கையாடல் செய்தது தெரிய வந்தது. வரி வசூல், வங்கியில் செலுத்தியதை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சரவணனை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி மாநகராட்சி நிர்வாகம் எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா