இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி முதலூர் கிராம பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை லாரியில் திருடி சென்ற வீரசாமி மற்றும் பாண்டி ஆகிய இரு நபரை சத்திரக்குடி சார்பு ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.