கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மத்தூர் கீழ் வீதி மாரியம்மன் கோயில் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு நபர்களில் மூன்று நபர்கள் போலீசாரை பார்த்து தப்பி ஓடி விட்டதாகவும், ஒரு நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.















