கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பெட்டிக்கடையில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.