கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் சாரதா ஸ்கூல் பின்புறம் உள்ள லேஅவுட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,₹28,200/- ரூபாய் பணம், செல்போன் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.