திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் வழிப்பறி மற்றும் அய்யம்பாளையத்தில் பலசரக்கு கடை மேற்கூரையை உடைத்து ரூ.90 ஆயிரம் திருடியதாக கூறினர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவர்கள் இருவரையும் பட்டிவீரன்பட்டி போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அதில் திருடிய பணத்தில் கோவா, மும்பை ஆகிய இடங்களுக்கு சென்று ஆடம்பர செலவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன், மனோஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.