திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட ஒரு லாரியை மடக்கி சோதனையிட்ட போது, அதில் 62 மூட்டைகளில் 2,170 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் கல்லுரல்விளை பெருமண்குழியைச் சேர்ந்த மொ்லின் (42). திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து(40). ஆகியோரை கைது செய்து லாரியுடன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்