திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர், சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர், பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரகுமான் பேட்டையைச் சேர்ந்த திலிப் (25). என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழையபேட்டை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த பேட்டை காவல்துறையினர் திலிப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்