திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் மொட்டணம்பட்டிரோடு ரயில்வே கேட் அருகே பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது கவனமாக செல்ல வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு செல்லக்கூடாது, ரயில்வே தண்டவாள பகுதிகளில் சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்களை பற்றி உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா