சிவகங்கை: காரைக்குடி, ஜூன்.23-காஞ்சிபுரம் மஹாமகரிஷி அறக்கட்டளை சார்பில் மஹாயோக பேரணியைகாரைக்குடி கே எம் சி மருத்துவமனை சேர்மன் டாக்டர். காமாட்சி சந்திரன் மற்றும் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பேரணி துவங்கி. புதிய பேருந்து நிலையம் அருகில், கண்ணதாசன் மணி மண்டபத்தில் நிறைவுற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் யோகாசனங்களை செய்து காண்பித்து , விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த அமைப் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில், மனித உயிர் ஆற்றல் மருத்துவம் என்ற மருத்துவ முறையின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட யோக பயிற்சி முறைகளை பலதரப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் மற்றொரு பிரிவான ” ஜென்ஸ்கர் “குணப்படுத்தும் தற்காப்பு கலையின் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் ஆரோக்கியம், படிப்பில் முன்னேற்றம், சுய ஒழுக்கம். மன வலிமை, போன்றவற்றை ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மூலம் வழங்கி வருகிறது. யோகா மற்றும் ஜென்ஸ்கர் தற்காப்பு கலையின் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும். உலகளவிலும், தேசிய அளவிலும் களம் அமைத்து தந்து சாதனையாளர்களை உருவாக்கி 2015 முதல் சர்வதேச யோகா தினம் முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு யோகாவில் 7 உலக சாதனையும். 7 தேசிய சாதனையும் புரிந்துள்ளது.
புனிதமான பாரத தேசத்து சித்தர்களும், முனிவர்களும் யோகிகளும் உலக மக்களுக்கு பாரபட்சமின்றி வழங்கிய அற்புத நன்கொடைதான் இந்த யோகாக்கலை. இன்றைய வாழ்வியல் முறையில் நமது பாரம்பரியமான இக்கலையின் பயன்பாட்டின் அவசியத்தை விளக்கி, யோசு தேசத்தில் வாழும் நமது மக்களிடையே மேலும் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜூன் 21 ம் நாள் சர்வதேச யோகா தினத்தன்று தமிழகம் முழுவதும் மஹாயோகம் பயிற்சி வழங்கும் அனைத்து ஊர்களிலும் “யோகா விழிப்புணர்வு பேரணி* நடத்த திட்டமிட்டு. பொதுமக்களுக்கு யோகா பயிற்சி வழங்க மஹாமகரிஷி அறக்கட்டளை மஹாயோகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது யோக பயிற்சியை ச.காமராஜ் வழங்கினார். சங்கர் நன்றி கூறினார். காரைக்குடி மஹாயோக தியான அன்பர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி