திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகர் மற்றும் விராலிப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது சம்பந்தமாக நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில், வத்தலகுண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில்,சப்- இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல்லா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வத்தலக்குண்டுவை சேர்ந்த ஷாருக்கான், ஸ்ரீசபரி உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மதன்குமார் மற்றும் சிறுவன் ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா