திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி , சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார், குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பின்புறம் தெற்கு தெருவை சேர்ந்த சிங்கத்தேவர் மகன் சூரிய பிரகாஷ் என்பவரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா