திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ,சப் இன்ஸ்பெக்டர் முத்துகுமார்,குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம் ,சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், ஆஷிக் முகமது ஆகிய 2 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா