சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி லீடர்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 21வது ஆண்டு விழா, தமிழ் புத்தாண்டு அன்று (14.4.2025), திங்கள்கிழமை மாலை 5. 32 மணியளவில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் கலியமூர்த்தி IPS சிறப்புரையாற்றினார், அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு நிர்வாக தலைவர் ராஜமாணிக்கம், லீடர்ஸ் அகாடமி முதல்வர் வளர்மதி,லீடர்ஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் முதல்வர் சசிக்கலா ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு சான்றிதல்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாலையில் தொடங்கி கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி