திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனத்துறை வானவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் கோம்பை, பன்றிமலை, தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது புடரிமேடு பகுதியில் கண்ணி அமைத்து முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்த சூர்யா(27). ஆச்சிமுத்து(55).செல்வகுமார்(27). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து முயல் பிடிக்கும் வலை, இறந்து கிடந்த ஒரு முயல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா