விருதுநகர் : காரியாபட்டி வட்டார விவசாயிகள் தங்களின் முன்னோர் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூலை 9-ல் தாசில்தார் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. என, காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கீதா தெரிவித்துள்ளார். காரியாபட்டி வட்டாரத்தில் , வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகளின் நிலை உடமை விவரங்கள் வேளாண் துறை தோட்டக்கலை துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்களால் இணையத்தில் கட்டணம் இன்றி பதிவு செய்யப்படுகிறது. மேலும், இனிவரும் காலங்களில் மத்திய மாநில அரசு திட்டங்கள் பிரதமரின் விவசாய ஊக்க தொகை பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இப்ப பதிவுகள் அடிப்படையில் வழங்கப்படும். தற்போது, விவசாயம் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்களின் நில உடமை விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தவணை பெற முடியும் வேளாண் அடுக்குத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ளோர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இதில், பலர் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ளதால், நில உடமை விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை இவர்களுக்காக ஜூலை 9-ல் காலை 10 மணிக்கு காரியாபட்டி தாசில்தார் அலுவலகங்களில் முன்னோர்கள் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் தேவையான ஆவணங்களை நேரில் கொண்டு வந்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி