திருநெல்வேலி : தென்காசி மாவட்டம், சிப்பிபாறை, பாறைபட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த காளிராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (19). என்பவர் சமூக வலைதளமான Facebook-இல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இது குறித்து திருநெல்வேலி மூன்றடைப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர், முருகேஷ் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப, எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்