திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரநல்லூர் அருகே ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது சில தினங்களுக்கு முன்பு திருடு போனதால் திருட்டு குறித்து ஊராட்சி செயலர் பிரம்மநாயகம் (40). அளித்த புகாரின் பேரில், வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர், லியோ ரெனிஸ் வழக்குப் பதிந்து விசாரித்தார். அதில், வீரவநல்லூர் சீனியாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாராம் (39). என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் (29.05.2025) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்