அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள் முன்னிலையில் 03.11.2020 அன்று சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. செல்வராசு அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை மேலாளர், சிமெண்ட் ஆலை அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகன அலுவலர் ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இறுதியாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலையில் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதுணையாக நிற்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
உடன் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் உடன் இருந்தார்.