திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் 15 வருடம் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8-நான்கு சக்கர வாகனம் மற்றும் 2-இரு சக்கர வாகனங்கள் உட்பட 10 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற (03.07.2025)-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும். ஏலம் எடுக்க விரும்புவோர் (02.07.2025)-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே ரூ.2000/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்கள் இயங்கும் நிலையில் இல்லாமல் scrap பயன்பாட்டிற்கு மட்டுமே ஏலம் விடப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்