தென்காசி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.C. சைலேந்திர பாபு IPS அவர்களின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள்,கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (05.12.2021 முதல் 09.12.2021) ஆகிய ஐந்து நாட்கள் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 27 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 182 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 92 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6649 பாக்கெட் குட்கா பறிமுதல் மேலும் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக உள்ளார் கஞ்சா வைத்திருந்த துரைமுருகன் 33. என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்..