திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இம் மாதம் 22 ஆம் தேதி தச்சநல்லூரில் நடைபெற உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம் மாநாட்டு திடலில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் (19.08.2025) அன்று சோதனையில் ஈடுபட்டனர். மேடை, நிர்வாகிகள் அமரும் இடம், தொண்டர்கள் அமரும் இடம் உள்ளிட்டவற்றில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்