திருநெல்வேலி: சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று திருநெல்வேலிமாநகர காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகரகாவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) மற்றும் காவல்துறையினர் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்