திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (08.02.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட காவல்துறையின் வாகனங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளையும், குற்றவாளிகளையும் விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை திறன்பட செயல்பட்டு கைது செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட காவல் ஆளிநர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 103 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்