தென்காசி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் ராமர் (38). என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கின் குற்றவாளியான ராமருக்கு (10.12.2025) அன்று ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ் வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















