திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர். தங்கமுனியசாமி சார்பு ஆய்வாளர்.விஜயபாண்டியன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பட்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த பட்டிகுளத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் மாணிக்கம் (வயது 55). என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் மது விற்பனை தொடர்பாக மாணிக்கத்தின் மகன்கள் பிரபு, சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா