திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோட்டில் தனியார் பாரில் மது அருந்தி கொண்டிருந்த பள்ளபட்டியை சேர்ந்த நவீன்,நிவிக்குமார் ஆகியோரிடம் அம்மா பட்டியை சேர்ந்த ஏசா, சீமோன்ராஜா, பாஸ்கரன், ராஜ வேளாங்கண்ணி ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் நவீன், நிவிக்குமார் காயம் அடைந்து மயக்கம் அடைந்தனர். இதனை தட்டிக்கேட்ட நிவி குமாரின் சகோதரர் சித்திரை செல்வன் அவரது நண்பர் நாகமுத்துவும் தாக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார் ஏசா, ராஜவேளாங்கண்ணி, சித்திரை செல்வன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா