கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கள்ளிப்பட்டி கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த போது மதுபானம் இருந்தது. சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.