கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் TO கிருஷ்ணகிரி NH பேரண்ட பள்ளி ஓசூர் ரோடு புதிய மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 2,46,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள், ₹2,160/- ரூபாய் மதிப்பிலான மதுபானம் இருந்தது. வெளிமாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து வாகனத்துடன் புகையிலை பொருட்கள், மதுபானம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.