கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 3,35,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள், ₹3,840/- ரூபாய் மதிப்பிலான மதுபானம் இருந்தது, வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதவு செய்யப்பட்டது .
















