கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் ஓசூர் To ராயக்கோட்டை ரோட்டில் உத்தனப்பள்ளி அம்ரீஷ் என்பவரின் வீட்டின் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹5,50,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள், ₹5,760/- ரூபாய் மதிப்பிலான வெளி மாநில மதுபானங்கள் இருந்தது,வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து வாகனத்துடன் புகையிலை பொருட்கள், மதுபானம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்