திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், உதயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கலுங்கடியை சேர்ந்த ஜோன்ஸ் ராஜா (35). நெடுங்குளத்தை சேர்ந்த கந்தையா (33). ஆகிய இருவரும் பரப்பாடி அருகே டிப்பர் லாரியில் ஆற்று மணலை சட்ட விரோதமாக அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து விஜயநாராயணம் காவல் ஆய்வாளர், பிரேமா ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜோன்ஸ் ராஜா, கந்தையா இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ½ யூனிட் ஆற்று மணலையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்