திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு போதை பொருள் மதிப்புக்குரியவையா? எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை தெற்கு இந்திய மருத்துவ சங்கம்,
இந்திய இராணுவ அகாடமி-தமிழ்நாடு மாநில வாரியம் போதைப்பொருள் துஷ்பிரயோக விழிப்புணர்வு குழு மற்றும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா, மருத்துவரின் பிரார்த்தனையுடன் மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சியாக வரவேற்பு நடனம் நடைபெற்றது.
வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் குமுதா லிங்கராஜ், வரவேற்பு உரையாற்ற பின்னர் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு “போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் சட்ட கட்டமைப்பு & சட்ட அமலாக்கம்”குறித்து அரவிந்தன், ஐ.பி.எஸ் சுருக்கமாக எடுத்துரைத்தார். “கொள்கை, தடுப்பு மற்றும் சமூக ஈடுபாடு: ஒரு அரசாங்க பதில்” குறித்து டாக்டர் டி. பிரபுசங்கர் ஐஏஎஸ் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகில் போதை பொருட்களை விற்பவர்களையும் அது குறித்து தகவல்களையும் தைரியமாக கல்வி நிறுவனங்கள் காவல்துறையினருக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மனநல மருத்துவர் டாக்டர் எம். சுரேஷ் குமார் போதைக்கு அடிமையாதலின் பின்னணியில் உள்ள மனதைப் புரிந்துகொள்வது. ஒரு மருத்துவக் கண்ணோட்டம்”என்ற தலைப்பிலும் டாக்டர் ஏ சிலுவை முத்து “போதையிலிருந்து மீட்பு வரை: மீட்பு மற்றும் நம்பிக்கையின் பயணம்”என்ற தலைப்பிலும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்த கருத்தரங்கத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகக் குழுவின் தலைவர் – டாக்டர்.சாந்த நாராயணன், முனைவர் ப.செங்குட்டுவன், டாக்டர் பி. இயக்குனர் டாக்டர்.அருண், மெடிக்கல் சூப்பிரடண்ட் டாக்டர் சதிஷ்தேவ், டாக்டர் ஷீலாராணி, ஸ்ரீதர், டாக்டர் நர்மதா, டாக்டர் கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். போதை பொருள் குறித்து கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும் அதன் பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை அனைவரும் ஏற்க டாக்டர் சுமித்ரா சுந்தரராமன், டாக்டர். சாந்தா நாராயணன் ஆகியோர் நன்றி கூறினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு