திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே வண்ணார்குளத்தை சேர்ந்த சின்னதுரை (37). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போக்சோ நீதிமன்றம் சின்னதுரைக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 11,000/- ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த பழவூர் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்