திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்த செட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த கென்னடிதர்மா(24). என்பவரை அம்பாத்துரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் கென்னடிதர்மாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா