திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி(30). என்பவரை எரியோடு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது அறிவுறுத்தலின்படி எரியோடு காவல் நிலைய ஆய்வாளர்.முருகன், நீதிமன்ற தலைமை காவலர்.கலா ராணி மற்றும் அரசு வழக்கறிஞர். மைதிலி அவரது சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ஜெயபாண்டி என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,20,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்த ஆண்டு இதுவரை 11 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா